jeudi 25 août 2016

சதுரங்க சித்திர கவி ஓங்கார நாயகன்




ஓங்கார நாயகன்

ஓதுமறை ஐங்கரனே! வா!நாவோங் கொண்டமிழை  
ஏதுகுறை யின்றித்தா! என்னுயிருள் - மோதுமலை
வீழ்கவே! உன்னருளால் மேவிய காதலின்
சூழ்கவே துாய தொடர்பு!

பக்கத்திற்கு எட்டுக் கட்டங்கள் அமைந்து அறுபத்து நான்கு கட்டங்கள் உள்ள சதுரங்க சித்திரத்தில், ஒரு கட்டத்தினின்று புறப்பட்ட குதிரை ஒன்று குதித்த இடத்தில் மீளவுங் குதிக்காமல் அறுபத்து நான்கு கட்டங்களிலும் ஒன்றும் விடாமற் செல்லுங்கால் செய்யுளிலுள்ள வரிசைப்படி எழுத்துகளைக் கட்டத்திற்கு ஓரெழுத்தாக அமையுமாறும், நேர் வரிசையிலோ கோணாந்தரங்களிலோ, அன்றி வேறு விதமாகவோ விருப்பமான பெயர்களும் சொற்றொடர்களும் புலப்படப் பொருந்துமாறும் புலவன் இயற்றும் கவிதை. (சதுரங்க விளையாட்டில் குதிரை "ட" அமைப்பில் தாண்டிச் செல்லும்)

பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.08.2016

Aucun commentaire:

Enregistrer un commentaire