vendredi 10 novembre 2017

சித்திர கவிதை


சித்திர கவிதை
பசுவின் பாய்ச்சல் [கோமுத்திரி]
  
கலிவிருத்தம்
  
வான்மழை இன்பம்! வளமுறு புவிகாக்கும்!
மான்விழி இன்பம்! மனமுறு சீர்காக்கும்!
கான்கழை இன்பம்! உளமுறு கவிகாக்கும்!
தேன்மொழி இன்பம்! தினமுறு தார்காக்கும்!
  
விளக்கம்
  
பசு மாடு நடந்துகொண்டே மூத்திரம் பெய்ய உண்டாகும் சுவட்டின் வடிவாக அமைக்கப்பட்ட கோடுகளில் எழுத்துக்கள் அமையப் பாடிய பாட்டுக் கோமுத்திரியாகும். [கோ - பசு] [மூத்திரம் - சிறுநீர்]
  
நான்கடிப் பாடலை இரண்டு அடியாக எழுதி, மேலும் கீழுமாக ஓரெழுத்து இடையிட்டுப் படிக்க அப்பாடலே வந்தமையும்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.11.2017

2 commentaires: